அமெரிக்கவுடனான பேச்சு வார்த்தைக்கு இடமில்லை-ஈரான் வெளியுறவு அமைச்சர்
இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தும் வரை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ( Abbas Araghchi ) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பேச்சுவார்த்தையை விரும்பியுள்ளதாகவும், பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்களில் பங்குதாரராக இருக்கும் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று அவர் கூறினார்.

