பெற்றோர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் கைப்பேசிகளைக் கையாளுவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போதே, அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
கைப்பேசி பயன்பாடு இளம் பராயத்தினர் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை அவர் இதன்போது எடுத்துரைத்தார்.
அத்துடன், ஆரம்ப வயதுகளில் திரை செயற்பாட்டைவிட, கற்றல், சமூக தொடர்பு மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரியுள்ளார்.

