பொசன் போய தினத்தில் இலவச கண் சத்திர சிகிச்சை
பொசன் போயா தினத்தை முன்னிட்டு சுமார் 300 பேருக்கு கண் தொடர்பான சத்திரசிகிச்சை வழங்கும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி, கண் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கசுன் குணவர்தனவின் யோசனையின் அடிப்படையில், கண் பிரச்சினைகள் உள்ள 300 பேருக்கு இன்று (10) காலை 5 மணி முதல் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஒரு சத்திரைசிகிச்சை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதன்போது ஒரே ஒரு சிறப்பு வைத்தியர் மாத்திரம் கண்புரை அகற்றுதல் மற்றும் உள்விழி உயிரியல் வில்லை(Lens fitting) பொருத்துதல் உள்ளிட்ட ஏராளமான கண் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

