இந்தியா செல்கிறார் முன்னால் ஜனாதிபதி

இந்தியா செல்கிறார் முன்னால் ஜனாதிபதி

உலகளாவிய நிகழ்வுகள் குறித்து விசேட உரை நிகழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியா விஜயம் மேற்கொள்கின்றார்.

குறித்த உரை நாளை (28) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் உரை நிகழ்த்தவுள்ளனர். 

குறித்த நிகழ்வில் தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும். 

மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். 

குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். 

மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மார்ச் 2 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel