லுணுகலை பகுதியில் வீதி தாழிறக்கம் – போக்குவரத்து பாதிப்பு

லுணுகலை பகுதியில் வீதி தாழிறக்கம் – போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை செங்கலடி பிரதான வீதியில் லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19ஆம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் அப்பகுதியில் பயணிக்கும் பயணிகள் அவ்விடத்தில் இறக்கப்பட்டு நடைபயணமாக அவ்விடத்தை கடந்து முச்சக்கரவண்டி மற்றும் வேறு வாகனங்களில் பயணிக்கின்றனர்.

மேலும் கடந்த பல வருடங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் காரணமாக அவ்விடத்தில் வீதி தாழிறங்கி காணப்பட்டதாகவும் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளினால் சிறிதளவு வீதி செப்பனிடப்பட்டு போக்குவரத்துக்கு வழி அமைக்கப்பட்ட தாகவும் இம்முறை பெய்த மழையால் வீதி முற்றாக தாழிறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எஸ். ரஜீவன்