ரிதியகம வண்ணத்துப்பூச்சி பூங்கா பொதுமக்கள் பாவனைக்கு

ரிதியகம வண்ணத்துப்பூச்சி பூங்கா பொதுமக்கள் பாவனைக்கு

தேசிய மிருகக்காட்சித் திணைக்களத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் வகையில், 2026 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இரண்டு முக்கிய அம்சங்களைச் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க படபெந்தி நேற்று ஆரம்பித்து வைத்தார்.

அதன்படி, தேசிய மிருகக்காட்சித் திணைக்கள உத்தியோகபூர்வ இணையதளம் ஆரம்பிக்கப்பட்டதோடு ரிதியகம சஃபாரி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய மிருகக்காட்சித் திணைக்களத்திற்கு சுமார் 8 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ இணையதளம் எதுவும் இல்லை, மேலும் டிஜிட்டல் யுகத்தில் நுழைவதற்கு அத்தகைய ஒரு இணையதளத்தின் தேவை அவசியமாகவிருந்தது.

அதன்படி, சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய மிருகக்காட்சித் திணைக்கள நிர்வாக அதிகாரசபை, அத்திணைக்களத்திற்கு புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டதுடன், https://nationalzoo.gov.lk/ என்ற அந்தப் புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை நேற்று அமைச்சர் தொடங்கி வைத்தார்.

manel