ஊர்களுக்கு செல்ல மாகும்புரயில் குவியும் பயணிகள்
சித்திரப் புத்தாண்டு விடுமுறைக்காக அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகத் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகப் பெருமளவிலான மக்கள் இன்று (11) அதிகாலை முதல் மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாகப் பேருந்துகளில் ஏறுவதற்காக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
எவ்வாறாயினும், போதுமான எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் அசௌகரியங்களின்றித் தமது இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

