வெற்றியின் ஒவ்வொரு துளிக்கும் தகுதியானவர் துருவ்: அனுபமா
தமிழ் சினிமாவின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ துருவ் விக்ரம் என்று சொல்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
துருவ்வுடன் ‘பைசன்’ படத்தில் இணைந்து நடித்துள்ள இவர், அந்தப் படம் தொடர்பான அனுபவங்களை, தனது சமூகப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
“இந்த ‘பைசன்’ வெறும் திரைப்படமல்ல. அது ஓர் உணர்வு; நமக்குள் ஏற்படும் மாற்றம்,” எனப் பாராட்டி உள்ளார். இந்தப் பதிவு இணைய வெளியில் பலரால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
“பைசன்’ படத்தில் 10 நாள்கள், படம் வெளியாகி 10 நாள்கள் என இரு விதமான உணர்வுகள் எனக்குள் சுழல்கின்றன. என் இதயம் இன்னும் எனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது.
“சில படங்கள் வெறும் ‘புராஜெக்ட்’களாக இருப்பதில்லை, அவை ஓர் உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன. ‘பைசன்’ எனக்கு அப்படித்தான்,” என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார் அனுபமா.
தனது வாழ்நாள் முழுவதும், தான் போற்றும் வகையில் தன்னைப் பாதித்த ஒரு படம் என்றும் இந்த உலகத்தில் வாழ்வதற்கு தாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நெகிழ்ந்து போகிறார் அனுபமா.
தாம் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும் உணர்வதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தக் கதைக்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
படத்தின் நாயகன் துருவ் விக்ரம் பற்றி சொல்லாமல் இருப்பாரா என்ன?

