உரிய இடமும் மரியாதையும் கிடைத்தது: ‘காந்தாரா’ பட வில்லன்

உரிய இடமும் மரியாதையும் கிடைத்தது:  ‘காந்தாரா’ பட வில்லன்

சம்பத் ராமை தீவிர சினிமா ரசிகர்கள் எளிதில் அடையாளம் கண்டுவிடுவார்கள். மற்றவர்களுக்காகச் சிறு அறிமுகம்.

பல ஆண்டுகளாக தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் சம்பத்ராம். சிறு சிறு வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு, காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது.

அண்மைக் காலமாக சில படங்களில் முக்கியத்துவம் உள்ள வேடங்களில் சம்பத் ராமைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில், ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சம்பத் ராம்.

அப்படத்தில் கதம்பர்கள் இனத்தின் தலைவனாக, உடல் முழுக்க அடையாளமே தெரியாத அளவிற்கு கறுப்பு நிறத்தில் ஒப்பனை செய்துகொண்டு நடித்திருக்கிறார். எனவே, நெருக்கமானவர்களுக்குக்கூட திரையில் தாங்கள் பார்ப்பது இவர்தான் என்பது தெரியவில்லை.

படம் வெளியானபின், அதில் நடித்திருப்பது இவர்தான் என்பதை அறிந்து, ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

“இயக்குநர் ரிஷப் ஷெட்டி என்னை ஒப்பந்தம் செய்யும்போதே, ‘நடித்திருப்பது நீங்கள் என்பது யாருக்குமே தெரியாமல் போகலாம்’ என்று கூறியுள்ளார். அதனால்தான் நானும் இதுவரை யாரிடமும் இப்படம் குறித்து விவரம் பகிரவில்லை.

எஸ். ரஜீவன்