ரூ. 45 கோடி செலவில் பாலங்கள் புனரமைப்பு
சுமார் ரூ.45 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் கொட்டலிய மற்றும் கல்லேல்ல பாலங்களின் அபிவிருத்திப் பணிகள் இன்று (04) ஆய்வு செய்யப்பட்டன.
பாலங்களின் புனரமைப்புப் பணிகளை துரிதமாகவும் தரமான முறையிலும் நிறைவு செய்து, அவற்றை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், மன்னம்பிட்டிய பகுதியில் ரயில் பாதைகளை வன யானைகள் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட வசதிகளும் இதன்போது பார்வையிடப்பட்டன.
மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அபிவிருத்தியுடன், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சகவாழ்வைப் பாதுகாக்கும் தீர்வுகளும் அரசாங்கத்தின் அபிவிருத்தி அணுகுமுறையின் முக்கிய அங்கமாகும் என வலியுறுத்தப்பட்டது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி மற்றும் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாநகர மேயர், திம்புலாகல பிரதேச சபைத் தலைவர், தமன்கடுவ பிரதேச சபைத் தலைவர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

