நான்கு முச்சக்கர வண்டிகளை திருடிய சந்தேக நபர் கைது

நான்கு முச்சக்கர வண்டிகளை திருடிய சந்தேக நபர் கைது

ஹோமாகம, கட்டுவான பகுதியில் 20 கிராம் 830 மில்லிகிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹோமாகம, மகரகம மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நான்கு முச்சக்கர வண்டிகளை திருடிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

இதற்கமைய, திருடப்பட்ட நான்கு முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

manel