இன்று நள்ளிரவுடன் பிரத்தியேக வகுப்புகள்,கருத்தரங்குகள் தடை

இன்று நள்ளிரவுடன் பிரத்தியேக வகுப்புகள்,கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது இன்று 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும்.

எஸ். ரஜீவன்

Related Posts