இந்திய உதவியுடன் பொலன்னறுவையில்24 புதிய வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

இந்திய உதவியுடன் பொலன்னறுவையில்24 புதிய வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

இந்திய அரசின் நிதியுதவி மற்றும் இலங்கை அரசின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை சுஹதகம மாதிரி வீட்டுத்திட்டம் இன்று (04) பிற்பகல் பொலன்னறுவை, மெதிரிகிரிய, தலாகொலவெவ கிராமத்தில் மக்கள் உரிமைக்கு வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் நேற்று (04) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந்த முழுமையான திட்டத்திற்காக ரூ. 36.52 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் பெருமளவான பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தின் மற்றுமொரு அடையாளமாக இந்த வீட்டுத்திட்டம் அமைந்துள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீட்டு வசதியை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manel