தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரசார கூட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரசார கூட்டம் கொட்டகலையில் நேற்றைய தினம் (23)இடம்பெற்றது.





கொட்டகலை முத்துவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிப்பாட்டு பூஜை இடம்பெற்றதுடன் கொட்டகலை RDM மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர்களும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுமான பழனி திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

