பசறை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

பசறை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கும் பசறை பால் சபைக்கும் இடையே வீதி ஓரமாக குறித்த நபரின் சடலம் காணப்படுவதுடன் அவ்விடத்தில் பாதணிகளும்,பை ஒன்றும் அதற்கு அருகாமையில் பை ஒன்றில் 4 யோகட் கோப்பைகளும் கையடக்க தொலைபேசி காணப்படுகின்றன.

இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

manel