நுவரெலியாவில் கடும் காற்று – 4 வீடுகளின் கூரைகள் சேதம்.
நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் இன்று (30) வீசிய கடும் காற்று காரணமாக 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.





தற்போது மழையுடன் வீசும் காற்றின் வேகம் காரணமாக குறித்து நான்கு வீடுகளில் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அப்பகுதி கிராம அலுவலகர்கள் ஊடாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்ட செயலக்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செ.திவாகரன்

