வேட்பு மனுவை தாக்கல் செய்தது தமிழ் முற்போக்கு கூட்டணி
நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரான்கெத்த பிரதேச சபைக்கு அருவால் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டணி (20.03.2025) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வேட்பு மணுவை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சுப்பையா கமலதாசன் மனுவை தாக்கல் செய்ததோடு தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் வைலட் மேரியும் வருகை தந்திருந்தார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

