மஹிந்தானந்தவை கைது செய்ய உத்தரவு
கடந்த அரசாங்க காலத்தில் சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பல் ஒன்றை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக,
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

