குறைந்த வருமானம் கொண்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

குறைந்த வருமானம் கொண்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கான உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராம மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 வருடங்களில் 2 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இளைஞர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel