இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 07 இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறையை அண்மித்த கடற்பரப்பில் கைதான அவர்கள், மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்றொழிலாளர்களுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

