மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை..!

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை..!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக 500க்கு மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ,மின் கட்டணங்களை இருபது முதல் முப்பது சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்று (16) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

manel