இரத்தினபுரியில் டெங்கு

இரத்தினபுரியில் டெங்கு

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடுமையான டெங்கு பரவல் ஏற்பட்டுள்ளதுடன் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 ஊழியர்கள் தொற்றுகுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம் அதிக ஆபத்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ஜனவரி மாதம் முதல், 1,311 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதன்மை நோய் பரப்பியாக ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, பலாங்கொடை மற்றும் கஹவத்தை போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுள்ள சுகாதாரப் பணியாளர்களால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை, மேலும் அதிகாரிகள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண டெங்கு பணிக்குழு நெருக்கடியை தீவிரமாக நிவர்த்தி செய்து வருகிறது.

manel