தலவத்துகொடவில் துப்பாக்கி சூடு

தலவத்துகொடவில் துப்பாக்கி சூடு

தலவத்துகொடவில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு வெளியில் இன்று(19) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 

வர்த்தகர் ஒருவருக்கும் கலால் அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் நீடித்ததால், வர்த்தகர் துப்பாக்கியை , கலால் அதிகாரியின் முன் காட்டியுள்ளார். இதனையடுத்து கலால் அதிகாரி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அருகிலுள்ள சுவரில் நான்கு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தலங்கம காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்த பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற தலங்கம காவல் நிலைய அதிகாரிகள் துப்பாக்கியைக் கைப்பற்றி சந்தேக நபர்களைக் கைது செய்தனர். 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

manel

Related Posts