மகிந்தவின் முன்னாள் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு விளக்கமறியல்
மகிந்தவின் முன்னாள் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி நெவில் வன்னியாராச்சியை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலை வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

