சந்திரசேனவிற்கு தொடர்ந்து விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இம்மாதம் 4 ஆம் திகதி எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டார்.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை, தமது ஆதரவாளர்களுக்கு எஸ்.எம் சந்திரசேன விநியோகிக்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

