படகு கவிழ்ந்ததில் இருவர் மாயம்

படகு கவிழ்ந்ததில் இருவர் மாயம்

லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். 

மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு காணாமல் போனவர்கள் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களைத் தேடும் பணிகளுக்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் சுழியோடிகள் பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

manel