மஹரகமவில் முச்சக்கர வண்டிக்குள் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு

மஹரகமவில் முச்சக்கர வண்டிக்குள் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு

மஹரகம கம்மான வீதி, 4ஆவது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவர் சடமாக நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

மஹரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் ஒரு கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Thuyavan