மரம் முறிந்து விழுந்ததால் கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

மரம் முறிந்து விழுந்ததால்  கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

காலி, கட்டுகொட ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்