வெள்ள நிவாரணம் கொண்டு சென்ற கார் ரயிலில் மோதி விபத்து

வெள்ள நிவாரணம் கொண்டு சென்ற கார் ரயிலில் மோதி விபத்து

காலி, பியதிகம புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே இந்த கார் மோதியுள்ளது. 

குறித்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்கள் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எஸ். ரஜீவன்