வெள்ளவத்தையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், உயிரிழந்தவர் கருப்பு நிற காற்சட்டை, வெள்ளையும் வெளிர்நீல நிற குட்டைக் கை சட்டையும் அணிந்திருந்துள்ளார். உயிரிழந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

