புத்தாண்டில் மாகும்புர பேருந்து நிலையத்தை நாடிய 55 பயணிகள்

புத்தாண்டில் மாகும்புர பேருந்து நிலையத்தை நாடிய 55 பயணிகள்

புத்தாண்டு காலப்பகுதியில், மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பயணிகள் தமது போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று (19) வரை இந்த எண்ணிக்கையிலான பயணிகள் இப்போக்குவரத்து நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளதாக மாகும்புர பல்நிலை போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்வாக உதவியாளர் நிமல் வெத்தசிங்க தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

பயணிகளின் வசதிக்காக மாகும்புர பயணிகள் முனையத்திலிருந்து 2,600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஆகியவை இணைந்து இந்தப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தின. 

கடந்த சில நாட்களாக சாதாரண கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்து பேருந்துகள் இயக்கப்பட்டன. 

எவ்வாறாயினும், நாளை (21) முதல் மீண்டும் சாதாரண கால அட்டவணையின் படி பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

manel