புதையல் தோண்டிய சந்தேகத்தில் பலர் கைது

புதையல் தோண்டிய சந்தேகத்தில் பலர் கைது

புதையல் தேடும் நோக்கத்திற்காக அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலன்னறுவை குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (26) அதிகாலை பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும பொலிஸ் பிரிவின் நுவரகேயாய பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 

இதன்போது புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட மூவருடன், அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர். 

சந்தேக நபர்கள் 20-43 வயதான புத்தளம் மற்றும் அத்தனகடவல பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

எஸ். ரஜீவன்