தித்வா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
14 December 2025நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாகவும் 184 பேர் இன்னும் காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களும் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். | Yowas JJ

