டில்லியில் பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர் மொகமட் என்ற ஒரு மருத்துவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவரது ஜம்மு காஷ்மிர் வீட்டைச் சோதனையி;ட அதிகாரிகள் அங்கிருந்து பற்றரிகள், நேரக்கணிப்புக் கருவிகள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மருத்துவர் உமர் மொகட்டின் தாயும் சகோதரரும் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக என்டிடிவி தெரிவித்தது.
இந்த மருத்துவர் ஓரு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் மேலும் இரண்டு மருத்துவர்களும் இவருடன் தொடர்புட்டுள்ளார்கள் என்றும் புலனாய்வுத் தகவல்கள் கிடைததுள்ளதாகத் தெரிவிக்க்பட்டுள்ளது.
டில்லியில் நடந்த தாக்குதல் காஷ்மீரின் பகல்ஹாம் சுற்றுலாத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் நடந்த முதலாவது பயங்கரவாதத் தாக்குதல் எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்து 24 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் நடந்த செங்கோட்டைப் பகுதி மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது..

