காலி முகத்திடலில் நீராடியவர் துறைமுக நகரில் சடலமாக மீட்பு
கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த இரண்டு இளைஞர்களும் ‘போர்ட் சிட்டி’ வளாகத்தில் இருந்து படகு உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் மஹரகம பகுதியில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.

