ஆரையம்பதியில் மினி சூறாவளியால் மின்சாரம் தடை
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளன.
பருவ மழை ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென வீசிய மினி சூறாவளியால் தற்போது மழையுடனான வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

