போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பிரதான கடத்தல்காரர் கைது
குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் குறித்த போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, வேறொரு நபர் மூலம் அதனை நாட்டுக்கு அனுப்பி தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இந்த சந்தேக நபர் நாட்டின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் பல்வேறு நபர்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருளை நாட்டுக்கு வரவழைத்துள்ளதாகவும், பின்னர் நாடு முழுவதும் அந்த போதைப்பொருள் விநியோகத்தை வழிநடத்தியுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கண்டறிந்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் இருபத்தி ஒரு கோடியே அறுபத்தி ஆறு இலட்சத்து எண்பதாயிரம் (216,680,000) ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

