சாம்பியன்ஸ் லீக் வெற்றிக் கொண்டாட்ட வன்முறையில் சுமார் 400 பேர் கைது
யுஇஎஃப்ஏ சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அர்செனலை வீழ்த்தி பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) வெற்றி பெற்றதை அடுத்து நடந்த கொண்டாட்டங்களின் போது 400-க்கும் மேற்பட்டோரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் அர்செனலை வீழ்த்தி PSG தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
சனிக்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில், சாம்ப்ஸ்-எலிசீஸ் வீதியில் 20,000-க்கும் மேற்பட்டோர் கூடிக் கொண்டாடியதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்ததாகவும், பிரான்ஸ் நாளிதழான ‘லெ மாண்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
கொண்டாட்டம் வன்முறையாக மாறியதால் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார், பிரதான வீதிக்கு அருகிலுள்ள ஒரு கியோஸ்க் தீக்கிரையாக்கப்பட்டது, குறைந்தது ஆறு வாகனங்கள் சேதமடைந்தன என்று ‘லெ மாண்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது; பின்னர் தீ அணைக் குறைந்தது ஆறு வாகனங்கள் சேதமடைந்தன என்று ‘லெ மாண்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது; பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் அது மேலும் குறிப்பிட்டது.
பரிஸின் 15வது வட்டார மேயர் அலுவலகம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், PSG கொண்டாட்ட அணிவகுப்பிற்காக ஞாயிற்றுக்கிழமை ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள ஷாம்ப் டி மார்ஸில் கிட்டத்தட்ட 100,000 பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தது.

