களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில, தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

