ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு விளக்க மறியல்

ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு விளக்க மறியல்

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி, அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். 

எப்பாவல, நல்லமுதாவ வீதிப் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். 

இதன்போது, குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எப்பாவல, எதகல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த நிலையில், 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

எஸ். ரஜீவன்