வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி
வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டியால் இருவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீ சைட் காட்மோர் நெடுஞ்சாலையில் டீ சைட் தோட்ட முன்னாள் காரியாலய பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தால் இருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வெளி நோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர். முச்சக்கர வண்டி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

