மனுஷ நாணாயக்காரவிற்கு பிணை

மனுஷ நாணாயக்காரவிற்கு பிணை

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை அனுப்புவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (15) முற்பகல் அவர் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதன்படி, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்து உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் தடை விதித்தார். 

அத்துடன், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் மேலதிக பிணை நிபந்தனை விதிக்கப்பட்டது. 

எஸ். ரஜீவன்