மனித பாவனைக்கு ஒவ்வாத 12,000 கிலோ இறைச்சிக்கு சீல்
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில், வெள்ளம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக மனித பாவனைக்கு பொருந்தாத நிலையை அடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று (7) முத்திரையிடப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு (1926) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த இறைச்சித் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட கால்நடை பண்ணையை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டு, அந்த இறைச்சித் தொகையை முத்திரையிட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலஸ்ஸ தெரிவித்தார்.

