மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 இலட்சம் ரூபாய் நன்கொடை
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவும் வகையில்,எவொன் பாமோ கெம் தனியார் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் குமார ஏகநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய குடியிருப்பு சட்ட ஆலோசகரான ஹேமந்த புஞ்சிஹேவா ஆகியோர் 20 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கினர்.
இதற்கான காசோலைகள் நேற்று (02) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில்கையளிக்கப்பட்டன. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன

