திருகோணமலை, குச்சவெளியில் நீண்டநாட்களாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

திருகோணமலை, குச்சவெளியில் நீண்டநாட்களாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் தப்பியோட்டம்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மிக நீண்டகாலமாக பொலிஸாரின் கண்ணில் படாமல் இரகசியமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை குச்சவெளி பொலிஸார் இன்று (23) அதிரடியாக முற்றுகையிட்டு அழித்துள்ளனர்நீண்டநாட்களாக திட்டமிட்டு, பொலிஸாருக்கு சவாலாக விளங்கும் வகையில் இப்பகுதியில் பெரும் கசிப்பு வியாபாரக் கும்பல் ஒன்று இந்த உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதுகுறித்து பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் பொலிஸ் குழுவினர் இன்று அப்பகுதியில் அதிரடித் தேடுதல் வேட்டை ஒன்றை நடத்தினர்.பொலிஸ் அதிரடி; இருவர் தப்பியோட்டம்
பொலிஸாரின் இந்த திடீர் முற்றுகையின்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரைக் கண்டதும் அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
எனினும், தேடுதல் வேட்டையின் போது பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளில், தப்பியோடிய சந்தேகநபர்களின் முகங்கள் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இதன் அடிப்படையில் அவர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.நண்டு பிடிக்க வந்தேன் கசிப்பு வியாபாரியின் விசித்திரக் கதைஇச்சம்பவத்தில் வேடிக்கையான விசித்திரம் என்னவென்றால், நீண்டகாலமாக இந்த கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தின் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரியே, பொலிஸாரைக் கண்டு தப்பியோடும் போது, நான் கசிப்பு காய்ச்ச வரவில்லை, இந்த இடத்திற்கு நண்டு பிடிப்பதற்காகவே வந்தேன் என்று கூறிவிட்டு தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக, நீண்டநாட்களாக கசிப்பு வியாபாரம் செய்தவரே இவ்வாறு ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறிவிட்டு ஓடியுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சட்ட நடவடிக்கைஇந்த முற்றுகையின்போது, கசிப்பு காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான கோடா மற்றும் கசிப்பு திரவங்கள் அனைத்தும் பொலிஸாரால் சம்பவ இடத்திலேயே ஊற்றி அழிக்கப்பட்டன.
அத்துடன், கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து உபகரணங்களும், சட்டவிரோதப் பொருட்களும் பொலிஸாரால் முற்றாகச் சேதமாக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.
விதிகளின் கீழ் இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.பொதுமக்கள் வாழ்த்துகோபாலபுரம் கிராமத்தில் நீண்டநாட்களாக சமூகச் சீரழிவை ஏற்படுத்தி வந்த இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து அழித்த, குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தேடுதல் வேட்டையில் பங்கேற்ற அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், கோபாலபுரம் கிராமப் பொதுமக்கள் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அவருடைய வீடியோ புகைப்படங்கள் ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளன

