காலி சிறைச்சாலையில் தீ விபத்து
காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த தகவலை அறிந்த காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

