கார்-பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கார்-பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய வீதியின் உடவளவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கார் ஒன்று பேருந்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் படல்கும்புர, மூனகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. 

எஸ். ரஜீவன்