இலங்கை-தாய்லாந்து ஒப்பந்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

இலங்கை-தாய்லாந்து ஒப்பந்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரிய அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்தது. 

பொறியாளர் கபில ரேணுக பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்தார். 

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஏ. எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. 

மனு அழைக்கப்பட்ட போது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், இலங்கையர்கள் பெரும் அநீதிக்கு ஆளாக நேரிடும் என்று சுட்டிக்காட்டினார். 

தாய்லாந்தில் நடைமுறையில் உள்ள “வெளிநாட்டு வர்த்தக தொழில் சட்டத்தின்” கீழ், அந்நாட்டின் சில வணிகத் துறைகளில் வௌிநாட்டினர் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

எஸ். ரஜீவன்