இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11பேர் கைது!

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11பேர்  கைது!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 20 கைபேசிகள், 3 மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.kathiravan.lk/இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11பேர் கைது!/

manel