ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடற்படையால் சுற்றிவளைப்பு

ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடற்படையால் சுற்றிவளைப்பு
கோப்பப் படம்

போதைப்பொருள் தொகை ஒன்றை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டின் மேற்குப் பக்கமாக ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இந்தப் பல நாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகத்திற்குரிய குறித்த மீன்பிடிப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ். ரஜீவன்